கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் திருமழிசை செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை மீண்டும் சேரும் சகதியுமாக மாறி இருக்கிறது. சாதாரண மழைக்கே திருமழிசை காய்கறி சந்தைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மார்க்கெட் முழுவதும் குளம் போல தண்ணீர் தேங்கியதால் தக்காளி உட்பட காய்கறிகள் தண்ணீரில் மூழ்கி அழகி விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காய்களை பாதுகாப்பாக வைக்க […]
