நைஜீரியாவில் மணமகன் உட்பட 6 பேர் வாயில் நுரை தள்ளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் ஒபின்னா மற்றும் அவரது மனைவி நெபெச்சி ஆகியோரின் திருமண விழாவின் போது அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமக்கள் மற்றும் 14 விருந்தினர்கள் வாயில் நுரை தள்ளி சுருண்டு விழுந்துள்ளனர். ஆனால் சம்பவயிடத்திலேயே 33 வயதான மணமகனும் மேலும் ஐவரும் உயரிழந்துள்ளனர். மணமகள் நெபெச்சி மற்றும் 7 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். […]
