நாகையில் திருமணம் ஆன 1 1/2 வருடங்களில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பண்டாரவாடை பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகவள்ளி என்ற பெண்ணுடன் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்காரியை வைக்குமாறு மாமியார் விஜயலட்சுமியிடமும், கணவர் பக்கிரிசாமியிடமும் கனகவல்லி தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். […]
