முன்னாள் அமைச்சர்களான ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர் பி உதயகுமார், மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி வெற்றி பெற திமுகவினர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மதுரையில் உள்ள 16வது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள 97 வாக்குச்சாவடிகளில் […]
