Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலைப்பார்த்த தொழிலாளர்கள்…. கொழுந்துவிட்டு எறிந்த தீ…. திருப்பூரில் பரபரப்பு….!!

பஞ்சு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அ.குரும்பபாளையம் பகுதியில் ஈஸ்வர மூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. அந்த குடோனில் தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவர் பஞ்சு கழிவு அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். அந்த ஆலையில் வெளிமாநிலத்தில் வசிக்கும் 5 – க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் எந்திரத்தை இயக்கி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அரவை இயந்திரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் – லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறம் மோதிய விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தையல் தைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் அரவிந்தசாமி மண்டல புதூரில் உள்ள தனது பெரியப்பாவான சின்னசாமி என்பவரது வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து அரவிந்தசாமி சோமனூர் கோழிப்பண்ணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர் – சரக்கு ஆட்டோ மோதல்…. தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ….!!

டிராக்டர் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 5 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அர்த்தனாரிபாளையம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமாத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் மற்றும் வீரமுத்து என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 5 பேரும் சரக்கு ஆட்டோவில் மூங்கில் படல் செய்யும் வேலைக்காக பவானி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவை பூவலப்பருதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு லிப்ட் தாங்க…. கத்தியை காட்டி மிரட்டிய நபர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருங்கல்மேடு பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 26.3.2019 அன்று வரதராஜன் குன்னத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊத்துக்குளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேம்பாலம் அருகே வரதராஜன் வந்துகொண்டிருந்தபோது கோவைபுதூர் பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவர் லிப்ட் கேட்டு வழி மறித்துள்ளார். அதன்பின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர் செய்த வேலை…. சுற்றி வளைத்த அக்கம்பக்கத்தினர்….!!

கட்டிட தொழிலாளி வீட்டில் புகுந்து திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பகவதி நகர் பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துப்பாண்டி மற்றும் அவரது  குடும்பத்தினர் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து முத்துப்பாண்டிக்கு வேலை குறைவாக இருந்ததால் 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டி வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இறைச்சி விற்பனை…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள சேவூர் பகுதியில் உள்ள தொட்டி பாளையத்தில் சிலர் காட்டுப் பன்றி இறைச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் அன்பரசும், சர்வேஸ்வரன் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் தோட்டத்து பகுதியில் உள்ள பள்ளத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டர் என்ற பெயரில்…. வாலிபர்கள் செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

விபச்சார வழக்கில் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கரட்டாங்காடு பகுதியில் தெற்கு காவல்துறையினருக்கு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர் மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மசாஜ் சென்டரில் திருநெல்வேலியில் வசிக்கும் 27 வயதுடைய பெண் இருந்தார். இவர் ஆண்களை வரவழைத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய ஆசிரியர்…. திடீரென நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இளம் பெண்ணை ஏமாற்றி நகையை பறித்துக்கொண்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நத்தக்காடையூர் பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதே பகுதியில் அன்வர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அந்த இளம்பெண்ணிடம் அன்வர் உசேன் பேச்சுக் கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவருக்கு பதில் இவரா….? புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரி…. குவியும் வாழ்த்துக்கள்….!!

திருப்பூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக செ.கு.சதீஷ்குமார் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக செந்தில்குமார் பணியாற்றி வந்தார். தற்போது செந்தில்குமார் திருப்பூரிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக ஈரோட்டில் பணியாற்றி வந்த செ.கு.சதீஷ்குமார் என்பவர் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின் செ.கு.சதீஷ்குமார் மாவட்ட ஆட்சியர் வினீத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் அவரோடு பணியாற்றும் சக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் டூ படித்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோழிப்பண்ணை கே.என். கார்டன் பகுதியில் மாகாளிதாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மகள் உள்ளார். தற்போது லதா பிளஸ் டூ முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து லதா வீட்டில் இருக்கும் சமயத்தில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் அவரது பெற்றோர் ஏற்கனவே கண்டித்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் – வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுப்புச்சாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவர் முத்தூருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பொன்னாபுரம் பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது சிவகுப்புச்சாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சிவகுப்புச்சாமிக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரியின் டீசல் டேங்க் வெடித்ததால்…. காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்….!!

காகித ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் மறுசுழற்சிக்காக பழைய காகித பண்டல்கள் ஏற்றி தனியார் காகித ஆலைக்கு லாரி ஒன்று வந்தது. இந்நிலையில் லாரியின் டீசல் டேங்க் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் தனியார் காகித ஆலையில் மறுசுழற்சிக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகித பண்டல்களில் தீ வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படி நிற்கக்கூடாது…. விதிமுறையை மீறிய பொதுமக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்காத பேக்கரி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் படி அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் கடை நடத்துபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் கே.எஸ்.சி. பள்ளி வீதியில் சுகாதார அதிகாரிகள் மற்றும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு பேக்கரி கடையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் சாலை கே.வி.ஆர். நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பூச்சிகாடு மற்றும் கே.வி.ஆர். நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தேடி வந்த இடத்தில்…. வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்…. வனத்துறையினருக்கு கிடைத்த தகவல்….!!

தெரு நாய்கள் கடித்து குதறியதில் பெண்மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி வட்டாரத்தில் வேலாயுதம்பாளையம், சங்கமாங்குளம், தாமரைக்குளம், நாதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது அவினாசி பகுதியில் பருவ மழைகள் பெய்யாத காரணத்தால் குளம், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அதனால் காட்டில் வசிக்கும் மான்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அருகில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு வருகின்றது. இந்நிலையில் நாதம்பாளையம் கூட்டுறவு வங்கி பகுதிக்கு பெண்மான் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விபத்துகள் ஏற்படுவதால்…. வேகத்தடை அமைக்க நடவடிக்கை…. அதிகாரிகளின் ஆலோசனை….!!

மாவட்ட அதிகாரி தலைமையில் திருப்பூர் – காங்கயம் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் சாலையில் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே அதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சாலையில் வேகத்தடைகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணக்குமார் தலைமையில் காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் காங்கேயம் சாலையில் குறுக்கு ரோடு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம்…. ஆசிரியர் குழுவினரின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்…!!

திருப்பூர் பட்டாம்பூச்சி ஆசிரியர்கள் குழுவினரின் பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது.   திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி சம்பந்தப்பட்ட ஓவியங்களை பட்டாம்பூச்சி ஆசிரியர் குழுவினர் வரைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த ஓவியங்களை கண்ணைக் கவரும் வகையிலும், மாணவர்களுக்கு கல்வியை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும்  பள்ளியின் சுற்று சுவர்களில் வரைந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா விழிப்புணர்வு குறித்த வாசகங்களையும் பள்ளியின் சுற்றுச் சுவர்களில் எழுதியுள்ளனர். மேலும் மாணவர்களின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எதிர்பார்க்காத அளவுக்கு…. நடைபெற்ற அமோகமான விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தேங்காய், எள் போன்ற பொருட்கள் ஏலத்திற்கு விட்டனர்.  திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளைபொருட்களை வாரந்தோறும் சனிக்கிழமை ஏலம் விடப்படும். இந்த ஏலங்களில் முத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள நகர், ஈரோடு, சிவகிரி, அஞ்சூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கலந்துகொண்டு விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் 10161 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நான் அதை குடிச்சிட்டேன்” கேட்டதும் அதிர்ச்சியடைந்த மனைவி…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

கால்நடை மருத்துவ உதவியாளர் பினாயிலை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எரசனம்பாளையம் கால்நடை மருந்தகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிருத்திக் ரோஷன் என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக செல்வராஜ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் திடீரென வீடுகளில் பயன்படுத்தும் பினாயிலை எடுத்து குடித்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சிறுவர்களின் உற்சாக குளியல்” ஆபத்தில் சிக்கும் நிலை…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

சிறுவர்கள் ஆனந்த குளியல் போடுவதாக நினைத்துக்கொண்டு ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் அமராவதி பிரதான பாசன கால்வாயானது உரிய பராமரிப்பு இல்லாமல் பாழாகி வருகின்றது. மேலும் கால்வாயில் துணி துவைப்பது, கழிவுநீர் கலப்பது போன்ற செயல்களால் நீரானது மாசுபட்டு வருகிறது. இந்நிலையில் பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து ஆறு, கால்வாய்களுக்கு அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கால்வாயில் ஆனந்த குளியல் போடுவதாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி செய்யாதீங்க…. ஏற்பட்ட சுகாதார சீர்கேடு…. சிரமப்படும் பொதுமக்கள்….!!

அரசு மருத்துவமனை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்ட குப்பைகள் நீண்ட நாட்களுக்கு பின் அகற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தாத நிலையில் பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முன் பகுதியில் பழைய துணிகள், பயன்படுத்தப்பட்ட கையுறைகள், பிளாஸ்டிக் அட்டைகள் உள்ளிட்ட குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த மரத்தின் கிளைகள் மின்கம்பியில் உரசுவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதனை வெட்டியுள்ளனர். அதனால் அந்த இடத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள்” தீவிரமாக நடைபெறும் பணி…. தொல்லியல் துறையினரின் ஆய்வு…!!

வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த கோவில்களை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மண்டலம் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க நூற்றுக்கணக்கான கோவில்கள் அமைந்துள்ளன. அதிலும் கடத்தூர் அர்ஜுனேஸ்வரர் கோவில், குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்டவை மிகவும் பிரபலமான கோவில்கள் ஆகும். ஆனால் சில கோவில்கள் மட்டும் பிரபலம் ஆகாமல், உரிய பராமரிப்பு பணி இல்லாமல் இருக்கின்றது. அந்த வகையில் குமரலிங்கம் கரிவரதராஜ பெருமாள் கோவிலானது உரிய பராமரிப்பு பணி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதே வாடிக்கையா போச்சு…. சோதனையில் சிக்கிய பொருள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை பல்வேறு கடைகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் திருப்பூர் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் சுமார் 20 கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதன்பின் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியான விஜய லலிதாம்பிகை, மாநகர நல […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கண்ணிமைக்கும் நேரத்தில் ” கோர விபத்தில் பறி போன உயிர்கள்…. திருப்பூரில் சோகம்….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாத்தா – பேத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் கனகசபாபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது பேத்தி அனன்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து உடுமலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கர்நாடகாவில் இருந்து தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியானது கனகசபாபதியின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கனகசபாபதி மற்றும் அனன்யா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அதுக்குனு இப்படியா செய்யணும்” கணவரின் கொடூர செயல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மனைவியை அடித்துக் கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் இளமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் இளமாறன் சரிதாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சரிதா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இளமாறன் சரிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இதுவே பெரிய சவால்” ஓசை எழுப்பி விரட்டப்படும் கிளிகள் …. விவசாயிகளின் தகவல்கள்….!!

சூரியகாந்தியை வெட்டும் கிளிகளை விவசாயிகள் ஓசை எழுப்பி விரட்டுகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியில் அதிக ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சூரியகாந்தியின் மணிகள் முற்றும் தருவாயில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில் சூரியகாந்தியை வெட்டும் கிளிகளை விவசாயிகள் ஓசை எழுப்பி அங்கிருந்து விரட்டுகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது தற்போது அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய வேண்டியுள்ளது. இதனையடுத்து இன்னும் 20 நாட்களில் சூரியகாந்திகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” 812 மதுபாட்டிகள்…. காவல்துறையினரின் செயல்….!!

பறிமுதல் செய்யப்பட்ட 812 மதுபாட்டில்களை கீழே ஊற்றி காவல்துறையினர் அழித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஒரு சிலர் மாவட்ட எல்லைகளை தாண்டி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வருகின்றனர். மேலும் ஒருசில இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் காவல்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு மதுகடத்துபவர்களை பிடித்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 812 மது பாட்டில்களில் இருந்த மதுவை மடத்துக்குளம் காவல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இப்படி சண்டை போடாதீங்க” சிறுவர்களின் கொடூர செயல்…. திருப்பூரில் பரபரப்பு…!!

சமாதானம் செய்ய சென்றவரை சிறுவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் திலகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதுடைய பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன் தனது நண்பர்களைப் பார்ப்பதற்காக கேம்பெ நகருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பிரவீன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சற்று தொலைவில் 17 வயது மதிக்கத்தக்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துச்சுன்னு தெரியல…. மளமளவென பற்றி எரிந்த தீ…. திருப்பூரில் பரபரப்பு…!!

தனியார் நூல் மில்லில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கேத்தனூர் பகுதியில் கழிவு பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் தனியார் மில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த மில்லில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள கழிவுப் பஞ்சு சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் ஈஸ்வர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிந்தாமணியின் காலில் புண் ஏற்பட்டதால் கடந்த நான்கு வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த சிந்தாமணி தனது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குப்பை தொட்டிகள் இப்படி கிடக்கிறது…. நிதி எல்லாம் வீணா போகுது…. பொதுமக்களின் கோரிக்கை….!!

குப்பைத்தொட்டியே குப்பையில் கிடைப்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் அதனை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை போடுவதற்காக குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தினர். இந்நிலையில் குப்பைத்தொட்டிகளே குப்பையில் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கும் குப்பை. மக்காத குப்பை என்று தரம் பிரித்து மேலாண்மை செய்வதற்கென அரசு பெருமளவு நிதி ஒதுக்கீடு வரும் நிலையில், இதுபோன்ற செயல்களால் நிதி வீணாகுவதாக மக்கள் குற்றம் சாற்றியுள்ளனர். மேலும் குப்பை தொட்டிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இசேவை மையத்தில் திரண்ட பொதுமக்கள்…. இந்த முறையை பின்பற்றுங்கள்…. தாசில்தாரின் நடவடிக்கை….!!

இசேவை மையத்தில் பொதுமக்கள் திரண்டு வருவதால் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அவர்களுக்கு தேவையான வாரிசுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை பெயர் மாற்றம், செல்போன் எண் இணைப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக இசேவை மையத்திற்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து கொடுக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பலர் சேவை மையங்களில் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இசேவை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சரியான பதில் கிடைக்கல…. பொதுமக்களின் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

தடுப்பூசி செலுத்தவில்லை என்று கேட்டபோது பணியாளர்கள் சரியான பதில் கொடுக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி இல்லை என்றும் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அன்று ஒரு சில கர்ப்பிணிகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திய நிலையில், பணியாளர்களுக்கு வேண்டிய சிலரை அழைத்து தடுப்பூசி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்த பகுதியில் 8 அங்கன்வாடி மையங்களுக்கு…. குடிநீர் வசதி ஏற்படுத்தனும்…. ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்….!!

மடத்துக்குளம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுப்பது என்று ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் காவியா அய்யப்பன் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றிய ஆணையாளர் மகேந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஈஸ்வரசாமி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் ஒன்றிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தரலனா திருமணத்தை நிறுத்திடுவ…. பனியன் நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

பனியன் நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் தனது அண்ணன் மணிகண்டனுடன் இணைந்து பனியன் நிறுவனம் நடத்தி வருகின்றார். இதனையடுத்து தினேசுக்கு அதே ஊரை சேர்ந்த டிரைவர் கருப்பணசாமி, திருமூர்த்தி மற்றும் கணேஷ் ஆகிய 3 பேரும் நண்பர்களாக இருந்தனர். ஆனால் தினேசுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் 3 பேரும் கடந்த 6 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்கு கம்பி வேலி அமைக்கக்கூடாது…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

தீயணைப்புத் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2015- ஆம் ஆண்டு அவினாசி-மங்கலம் சாலையில் வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகில் தீயணைப்பு நிலையத்திற்கு 1 1/2 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இதனிடையில் தீயணைப்பு நிலைய கட்டிட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? அதிர்ச்சியடைந்த மனைவி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டில் கணவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகில் சரவணகுமார், தனது மனைவி மகாலட்சுமி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலை வேளையில் வீட்டிற்கு வந்த சரவணக்குமார் அறைக்குள் சென்று உள்புறமாக கதவை பூட்டி விட்டார். இதனையடுத்து சுமார் 1 மணி நேரமாகியும் சரவணகுமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் மகாலட்சுமி ஜன்னல் வழியாக பார்த்தபோது சரவணகுமார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. அதிகாரிகளின் திட்டம்….!!

போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக சுற்றுச் சாலைகள் அமைப்பதற்கும் அதிகாரிகள் திட்டம் தீட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கின்றது. எனவே உள்ளூர் திட்டக் குழுமத்தின் எல்லைக்குட்பட்ட திருப்பூர், அவினாசி, பல்லடம் போன்ற பகுதிகளில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் இதற்கு முடிவு காண்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமையில், உள்ளூர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதற்கு தடை விதித்ததால்…. சரிவடைந்த வாழை இலை…. வியாபாரியின் கவலை….!!

சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வாழை இலையின் விலை சரிந்து வருவதாக வியாபாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் திருமணம், கோவில் விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுவதில்லை. இதனால் பல வர்த்தகங்களும் பாதித்ததோடு வாழை இலையின் வர்த்தகமும் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த வாழை இலை வியாபாரி கூறியபோது, 10 ஆண்டுகளுக்கும் மேல் வாழை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், ஆலாந்துறை, மாதம்பட்டி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நான் தண்ணீர் வாங்கிட்டு வரேன்” தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவரான கிரண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிரன் குமாருக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை தனது மகளை அழைத்து வருவதற்காக மில்லுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அந்த சிறுமி திரும்பி வராததால் அதிர்ச்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய வடமாநில நபர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் போதைப் பொருட்கள் கடத்தும் நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பல்லடம் – செட்டிபாளையம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும்போது காவல்துறையினரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றுள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தேடி வந்த இடத்தில்… வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்… வனத்துறையினருக்கு கிடைத்த தகவல்…!!

பெண் மானை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் மனிதர்கள் அவரவர் தேவைகளுக்காக காட்டை அழித்ததால் பருவ மழைகள் பெய்வதில்லை. இதனால் குளங்கள் வறண்டு விட்டதால் வன விலங்குகள் அனைத்தும் நகர்ப்புறங்களுக்கு தண்ணீர், உணவுகளை தேடி வருகின்றது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் ஏராளமான மான்கள் கோதபாளையம், தெக்கலூர், புதுப்பாளையம் உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் வசித்து வருகின்றது. இந்நிலையில் மான்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக நகர்ப்புறங்களுக்கு வரும்போது அங்குள்ள தெருநாய்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிரைண்டர் கல்லை போட்டு…. நண்பருக்கு நேர்ந்த கொடூரம்…. வாலிபருக்கு அளித்த ஆயுள் தண்டனை….!!

நண்பனை கொலை செய்ததற்காக வாலிபருக்கு ஆயுள்கால தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூலாங்கினர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் ஜெயசிம்மன் என்பவரும் வசித்து வந்துள்ளார். எனவே நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 9.8.2017 அன்று இரவு அரவிந்தன் வீட்டிற்கு அருகில் வைத்து மது குடித்துள்ளனர். அப்போது அரவிந்தன் ஜெயசிம்மன் தாயார் பற்றி தவறுதலாக பேசியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜெயசிம்மன் கிரைண்டர் கல்லை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பட்டா பெயர் மாற்றம்…. சிக்கிய துணை தாசில்தார்…. லஞ்சஒழிப்பு துறையினரின் நடவடிக்கை….!!

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கேத்தனூரில் ராஜாமணி என்ற நெசவு தொழிலாளி வசித்து வருகின்றார். இவர் தன் தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவது குறித்து உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படாததால் தாலுகா அலுவலகம் சென்று மண்டல துணை தாசில்தார் மேகநாதனை சந்தித்து கூறியுள்ளார். அதற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எப்போதான் இதை முடிப்பீங்க… பொதுமக்களின் எச்சரிக்கை… சப்-கலெக்டருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

புதிதாக நடைபெறும் தார்சாலை பணியை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் சப்- கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டன் புதூரில் வசிக்கும் மக்கள் ஒன்றிணைந்து சப்-கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கவுண்டன்புதூரில் இருக்கும் சாலையானது 20 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டதாகவும், அதனை சீரமைக்க வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பின் பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு பிறகு அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுள்ளது. ஆனால் தார் சாலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பொய்யான புகாரை வாபஸ் வாங்குங்க… சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

வக்கீலின் உறவினரை அடித்து தாக்கியதால் அவரது தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரலிங்கம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வக்கீலாக பணியாற்றி வரும் சென்னியப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் வீரமணி, செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் சென்னியப்பனின் உறவினரான சரவணன் என்பவரிடம் தகராறு செய்து அடித்து தாக்கியுள்ளனர். இந்நிலையில் சென்னியப்பன் சண்டையை தடுக்க சென்றதால் அவரையும் தாக்கியுள்ளனர். இதனால் உடுமலை அரசு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நல்லதா போச்சு… காய்கறி வியாபாரிகளின் ஆர்வம்… தீவிரமாக நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்…!!

சந்தையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் காய்கறி வியாபாரிகள் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் பகுதியில் சந்தை அமைந்துள்ளது. அந்த சந்தையில் தடுப்பூசி முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது அங்குள்ள காய்கறி வியாபாரிகள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக முக கவசம் அணிந்த படி சென்றுள்ளனர். அதன்பின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் வேகமா போனிங்களா… சோதனையில் சிக்கிய பொருள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் திடீரென காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து அவர் வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில்  235 மது பாட்டில்கள் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் சிவன்மலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? திடிரென ஏற்பட்ட விபத்து… தீயணைப்பு துறையினரின் போராட்டம்…!!

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் காட்டன் யான் ஸ்பின்னிங் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மில்லில் உள்ள தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது மில் வளாகத்தில் உள்ள குடோனில் கழிவு பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென குடோனில்  தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கே வேலை பார்க்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பண்றதே பெரிய தப்பு… காவல்துறையினரை தாக்கியவர்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்தியதோடு காவல்துறையினரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் லோகேஸ்வரன், சட்டாம்பிள்ளை, நடராஜ், சுதன், […]

Categories

Tech |