Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த பேருந்து…. நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி பலி…. திருப்பூர் அருகே நடந்த கோர விபத்து….!!!!

திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழவஞ்சிபாளையம் வேலன் நகரில் சுரேஷ் மற்றும் தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தக்ஷனா என்ற நான்கரை வயது பெண்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தீபா தனது மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பூம்புகார் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்சியர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. பாரதிய கிசான் சங்கத்தினரின் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரதிய கிசான் சங்கத்தினர் விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விளை கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விவசாய விளை பொருள்கள் அனைத்துக்கும் இடுபொருள் செலவைக் கணக்கிட்டு லாபகரமான விலை அறிவிக்க வேண்டும் எனவும், பாலை விவசாய விளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய தம்பதியினர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய தம்பதியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.சாலையில் ஆயுர்வேதிக் மசாஜ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மசாஜ் சென்டர் உரிமையாளரானா கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி சிறப்பு முகாம்” வருகின்ற 12-ம் தேதி…. கலெக்டரின் தகவல்….!!

உடுமலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வருகின்ற 12-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் சுற்றுலாத்துறையினர் சார்பாக நடைபெற இருக்கும் சிறப்பு தடுப்பூசி முகாமில் வருகின்ற 12-ஆம் தேதி முதல் தேஜஸ் மஹாலில் வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இதில் சுற்றுலா தொழில்முனைவோர்கள், தங்கும் விடுதிகளில் வேலை பார்க்கும் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆடு, பூனைகளை வேட்டையாடிட்டு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி….!!

கிராமப் பகுதிகளில் சிறுத்தை புகுந்து ஆடு, பூனைகளை வேட்டையாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜிலேப்ப நாயக்கனூர் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் விவசாய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடியது. மேலும் 2 பூனைகளையும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டர் பெயரில்…. தம்பதியினர் செய்த செயல்…. குண்டர் சட்டத்தில் கைது….!!

சட்டவிரோதமாக விபச்சாரம் நடத்திய தம்பதியினரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.ரோட்டில் ஆயுர்வேதம் மசாஜ் என்ற பெயரில் சென்டர் நடத்தப்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக மாவட்ட வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் கடந்த மாதம் 23-ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக மசாஜ் செண்டர் உரிமையாளரான […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாபகரமான விலை அறிவிக்கனும்…. பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

பாரதிய கிசான் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கத்தின் சார்பாக விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமை தாங்கினார். இதனையடுத்து போராட்டத்தில் விவசாய விளைபொருட்கள் அனைத்துக்கும் இடுபொருள் செலவைக் கணக்கிட்டு லாபகரமான விலை அறிவிக்கவேண்டும். அதன்பின் பாலை விவசாய விளைபொருளாக அறிவித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சில ஆண்டுகள்தான் ஆனது…. இடிக்கப்படும் தடுப்பு சுவர்கள்…. வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை….!!

மேம்பாலத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசியில் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இதன் அருகில் ரயில் நிலையம் இருக்கின்றது. இதனால் அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தில் ரயில்வே துறை சார்பாக 4 தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு சில ஆண்டுகளான நிலையில் இதனை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தற்போது பழமையான இந்த தடுப்பு சுவர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வீதிகளை மீறிய வாகன ஓட்டிகள்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….

விதிகளை மீறிய 3825 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடத்திய தீவிர வாகன சோதனையில் தலைக்கவசம் அணியாமலும், குடிபோதையிலும், சீருடை அணியாமலும். ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவர்கள் மீதும், அதிவேகமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காளிபாளையம் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் உள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக பார்த்திபனும் அதே பகுதியில் வசிக்கும் 23 வயது பெண்ணும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில்  பார்த்திபனிடம் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் பார்த்திபன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதை தூர்வார வேண்டும்…. குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாக்கடை கால்வாய் தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகரில் உள்ள குப்பைகளை பணியாளர்கள் அகற்றிவருகின்றனர். இதேபோன்று மாநகரில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம், ராமநாதபுரம் 2-வது வீதி உள்ளிட்ட இடங்களில் சாக்கடை கால்வாய் தூர்வாராமல் இருப்பதால் கழிவுநீர் சாலையில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சாக்கடை கால்வாய் அருகில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தின்பண்டங்களை எடுத்துட்டு போகுது…. அட்டுழியம் செய்யும் குரங்கு…. அதிகாரிகளின் முயற்சி….!!

கடைகளில் நுழைந்து தின்பண்டங்கள் மற்றும் பழங்களை தின்று செல்லும் குரங்கை அதிகாரிகள் பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 குரங்குகள் அட்டூழியம் செய்து வருகிறது. இந்த குரங்குகள் காட்டூர் ரோடு கண்டியம்மன்கோவில் பகுதி கடைகளில் நுழைந்து பழங்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் செல்கிறது. மேலும் அந்த பகுதியில் செல்பவர்களை பயமுறுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில்குமார் உத்தரவின்படி, வனவர் திருநாவுக்கரசு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விசேஷத்திற்கு சென்ற மனைவி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆதியூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் மகள் திருப்பூரிலும் 2-வது மகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள திங்களூரிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மூத்த மகளுக்கு குழந்தைகள் இல்லாததால் தனது தந்தை வீட்டிற்கு மூத்த மகள் அடிக்கடி வந்து விடுவார். இதனால் மனவேதனை அடைந்த கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி மது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சேவல் சண்டை…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்குரார்குட்டை பகுதியில் தனிப்படை காவல்துறையினருக்கு பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு கைலி அணிந்துகொண்டு மாறுவேடத்தில் சென்றுள்ளனர். அப்போது அங்கு சென்ற காவல்துறையினர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் குறிச்சிக்கோட்டை பகுதியில் வசிக்கும் கஞ்சிமலை, செந்தில், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? மயில்களுக்கு நடந்த பரிதாபம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மர்மமான முறையில் 4 ஆண் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பகுதியில் 4 ஆண் மயில்கள் அடுத்தடுத்து இறந்து கிடந்துள்ளது. மேலும் 4 பெண் மயில்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த குடியிருப்போர் நலச் சங்கத்தினர் இதுகுறித்து வனத்துறையினர், பூமலூர் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் மங்கலம் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி திருப்பூர் வனத்துறையினர் செந்தில்குமார், திருமூர்த்தி, கிராம நிர்வாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. சங்கத்தினர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யு. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. சங்கத்தினர் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பாலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில்  கியாஸ் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கியாஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் சி.ஐ.டி.யு. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சனி மகா பிரதோஷ பூஜையை முன்னிட்டு…. நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஆவணி மாத சனி மகா பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜெயகொண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத சனி மகா பிரதோஷ பூஜை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு ஜெய்கொண்டேஸ்வரர் மற்றும் நந்திபெருமான் போன்ற தெய்வங்களுக்கு இளநீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம்  உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் கலந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தேடி வந்த இடத்தில்…. மான்குட்டிக்கு நடந்த சோகம்…. தீயணைப்புத்துறையினரின் தீவிர முயற்சி….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் குட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணக்காடு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் உடுமலை வனச்சரக மலை அடிவாரப் பகுதிக்கு அருகில் கார்த்திகேயனுக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு கார்த்திகேயன் தென்னை மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்று பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு மான் குட்டி தண்ணீர் தேடி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விருந்திற்கு வந்த வாலிபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மேல்கரைபட்டி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று காரணமாக கடந்த 1 ஆண்டு காலமாக கல்லூரி திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சூரியகுமார் 4-ஆம் ஆண்டு என்ஜினியரிங் படிப்பை ஆன்லைன் மூலம் படித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியிணைக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி ஒருவர் தனது வீட்டில் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள்…. தூய்மை பணியாளருக்கு நடந்த சம்பவம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

முன் விரோதத்தால் தற்காலிக தூய்மை பணியாளரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிபாளையம் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சூசையாபுரம் பகுதியில் தங்கியிருந்து தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விநாயகத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து விநாயகம் ஒடக்காடு லிங்க கவுண்டன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த மாணவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள சிக்கன்னா கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து குமரேசனுக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வயிற்று வலி அதிகமானதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட நபர்…. பொதுமக்களின் தகவல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

மோட்டார் சைக்கிள்களை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் வசிப்பவர்கள் புதுக்காட்டில் உள்ள பனியன் நிறுவனங்கள் முன்பு வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் ஒருவர் சைடு லாக் போடப்பட்டுள்ளதா என நோட்டமிட்டு செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் நாய்கள்…. அச்சமடையும் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

பேருந்து நிலையத்திற்குள் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள நாய்கள் இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுகளை தின்பதற்காக அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் உடுமலை பேருந்து நிலையத்திற்குள் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனையடுத்து சில நேரங்களில் அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டு அங்குமிங்கும் ஓடுகின்றன. மேலும் நாய்கள் பேருந்து வளாகத்தில் கூட்டமாக படுத்து ஓய்வெடுக்கின்றன. இந்நிலையில் பயணிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. கடைக்காரருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கார் மோதியதில் பஞ்சர் கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளகோவில் பேருந்து நிலையம் அருகில் மெயின் ரோட்டில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இந்நிலையில் சின்னசாமி தனது கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கோயம்புத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் தாறுமாறாக ஓடி சின்னசாமி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு…. அமோகமாக நடைபெற்ற விற்பனை…. மகிழ்ச்சியில் தொழிலாளிகள்….!!

கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு கிருஷ்ணரின் சிலையை விற்பனை செய்து வருகின்றனர். கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு பலர் வீடுகளில் கிருஷ்ணர் சிலைகளை கொலு வைத்து வழிபடுவார்கள். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை களிமண்ணை வைத்து அச்சு பதித்து வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்கள் இந்த தொழிலை செய்து வருகின்றனர். இந்த சிலைகள் மற்றவர்களை கண்ணை கவரும் வகையில் வர்ணம் பூசி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய வேன்…. சேதமடைந்த கோவில்…. திருப்பூரில் பரபரப்பு….!!

வேன் எதிர்பாராதவிதமாக கோவிலில் மோதியதில் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வலையபாளையம் பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான சுயம்பு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிந்தாமணிப்பாளையம், போலநாயக்கன்பாளையம், நட்டுக்கொட்டையான்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பங்குனி மாதங்களில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டி திருவிழா நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கோபி பிரதான சாலையில் கோவில் அமைந்துள்ளதால் அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அம்மனை காவல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் சிவன்மலை அடிவாரம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்ட் தொழிலாளியான நாகராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் திருப்பூர் பகுதியில் இரவு நேரம் முழுவதும் வேலை செய்துவிட்டு மறுநாள் காலையில் காங்கேயம் சாலை வழியாக சிவன்மலையில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது புதுப்பாளையம் பகுதியில் சென்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சுகுழிபட்டி என்ற பகுதியில் மூக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்தி தேவி என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 வருடங்களாக இவர்கள் ஒரு தேங்காய் களத்தில் தங்கி தேங்காய் உடைத்து உலர்த்தும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மூக்கன் தேங்காய் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மத்திய அரசிற்கு கண்டனம்…. சி.ஐ.டி.யு. சங்கத்தினர் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யு. கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரன் சிலை அருகில் சி.ஐ.டி.யு. மாவட்ட குழு சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் சி.ஐ.டி.யு பனியன் சங்க செயலாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசு பொதுத்துறை பங்குகள் மற்றும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், சாலையோர வியாபாரிகள், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடிப்பட்டு கிடந்த காகம்…. காப்பாற்றிய வாலிபர்…. குவியும் பாராட்டுகள்….!!

அடிப்பட்ட காகத்திற்கு சிகிச்சை வழங்கி காப்பாற்றிய வாலிபரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தோட்டத்துபாளையம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தனின் வீட்டின் அருகில் காகம் ஒன்று அடிபட்டு காயத்துடன் பறக்க முடியாமல் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த ஆனந்தன் உடனடியாக காகத்தை மீட்டு திருப்பூர் கால்நடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதனையடுத்து ஆனந்தன் அங்கிருந்த ஊழியர்களிடம் காகத்திற்கு சிகிச்சை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. தொழிலாளி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

கூலித் தொழிலாளியிடம் பணத்தைக் கேட்டு மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கும்பம்பாளையம் பகுதியில் தங்கவலசு என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தங்கவலசு குமரலிங்கம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிவசெல்வம் என்பவர் தங்கவலசுவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து சிவசெல்வம் தங்கவலசுவை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இந்நிலையில் தங்கவலசு, சிவசெல்வத்திற்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் சிவசெல்வம் தங்கவலசுவின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உன்னை இப்படி பண்ணது யார்….? நாடகமாடிய கணவன்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்னிகா, ஹர்சினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பிரியா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அதிகரிக்கும் விபத்து” சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை அதிகாரிகளிடம் விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனிக்கடவு ஊராட்சியில் ராமச்சந்திராபுரம், சிந்திலுப்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் சிந்திலுப்பு சாலை, ராமச்சந்திராபுரம் சாலை சந்திக்கும் இடத்தில் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனையடுத்து இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த பொருட்களை இந்த சாலை வழியாக கொண்டு சென்று வருகின்றனர். இந்த 3 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செவிலியர்களை தாக்கிய வழக்கு…. வாலிபர் கைது…. திருப்பூரில் பரபரப்பு….!!

செவிலியர்களை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெடுஞ்செழியன் காலனி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விபத்தில் காயமடைந்து உடுமலை பகுதியில் உள்ள கோகுல் பாலிகிளினிக் என்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். அங்கு சேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் மருத்துவமனைக்கு நெடுஞ்செழியன் காலனி பகுதியில் வசிப்பவர்கள் சிலர் வந்து செவிலியர்களை தாக்கி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பணியாற்றும் செவிலியரான செல்வி என்பவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரிகள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து ஒரு லாரி தார் லோடு ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியிலிருந்து பனியன் சரக்கு பெட்டிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி மற்றொரு லாரி வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து பனியன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தார் லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் பால்பண்ணை உதவி மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் முகிலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பால் பண்ணையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முகிலனும் அவருடன் வேலை பார்க்கும் மற்றொரு உதவி மேலாளரான அகிலேஸ்வரன் என்பவரும் பால் சேகரிப்பு மையங்களில் ஆய்வு செய்வதற்காக காரில் வந்துள்ளனர். இந்த காரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மாணவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்னை நார்த் தொழிற்சாலையிலுள்ள குழியில் விழுந்து 9 – ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 – ஆம் வகுப்பு படித்து வந்த கேசவன் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு நெடுநாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கேசவன் தென்னை நார் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கேசவன் வேலைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பருத்தி ஏலம்….1 கோடியே 58 லட்சத்துக்கு விற்பனை…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….!!

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4352 பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மூட்டைகள் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு உடுமலைப்பேட்டை, திருச்சி, கரூர், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அரவக்குறிச்சி மற்றும் கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 386 விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனையடுத்து உடுமலை, புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

பயணிகள் நிற்கும் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பழனி சாலையில் நகராட்சி மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலைய வளாகத்தில் திருப்பூர், ஈரோடு, தாராபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் கடைகளும் அதற்கு முன்புறம் பயணிகள் கட்டுவதற்கான இருக்கைகள் உள்ள இடமும் உள்ளது. அந்த கட்டிடத்தை தாங்கி நிற்க தூண்களும் உள்ளன. இந்நிலையில் தாராபுரம் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் பயணிகள் நிற்கக்கூடிய கட்டிடத்தின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் வீனித் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 11 ஆம் தேதி பணி நாளாக இருக்கும். ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வங்க தேசத்தவர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள புக்கிளிபாளையம் பகுதியில் தனியார் பனியன் நிறுவனம் உள்ளது இந்த பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்து தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு…. மளமளவென பற்றி எறிந்த தீ…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

பஞ்சாலை எந்திரத்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணபிரான் என்ற மகன் உள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் கழிவு பனியன்களிலிருந்து பஞ்சு தயாரிக்கும் எந்திரம் வைத்து இயக்கி வருகிறார். இந்நிலையில் பஞ்சு தயாரிக்கும் இயந்திரங்கள் 3 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து திடீரென மோட்டார் ஆயில் சீல் உடைந்து பஞ்சு கழிவு எந்திரங்களில் மளமளவென தீப்பிடித்து எரிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் நடைபெற்ற சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. குண்டர் சட்டத்தின் கீழ் கைது….!!

ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முருகம்பாளையம் பாறக்காடு பகுதியில் கடந்த மாதம் 22 – ஆம் தேதி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் இணைந்து ஒரு வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அங்கிருந்த மொத்தம் 12 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜீனியரான நரேன் மற்றும் சுரேன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நரேன் மற்றும் சுரேன் ஆகிய இருவரும் தனது நண்பர்களான நவீன், கார்த்திக் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்….!!

நூல்மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த நூல் மில்லில் 16 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நூல்மில் எந்திரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து வெள்ளகோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. காட்டி கொடுத்த சிசிடிவி கேமரா….!!

வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் அச்சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனில்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அனில்குமார் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் ரயில்வே காலனியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் அனில்குமார் தனது நண்பரான முருகன் என்பவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை இரவலாக வாங்கி கொண்டு தனது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. வசமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் 17 வயதுள்ள சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒரு மில்லில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென அந்த சிறுமி காணாமல் போனதால்  அவரது பெற்றோர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த உடுமலை காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை குறித்து விசாரணை நடத்தி  வந்தனர். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பூசாரி செய்த செயல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

போக்சோ சட்டத்தின் கீழ் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொழுமம் பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் அய்யப்பன் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அய்யப்பனை போக்சோ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யுகபாரதி என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 16 ஆயிரத்து 370 பாக்கெட் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உடுமலை சத்திரம் […]

Categories

Tech |