Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் காவல்துறையினருக்கு உப்பு பாளையம் ரோடு நூலகம் அருகில் பணம் வைத்து சூதாடியதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நூலகத்திற்கு பின்புறம் பணம் வைத்து 7 பேர் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த கனமழையால் திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ரங்கசாமியின் மனைவியான காளியம்மாள், அவரது உறவினரான சசிகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பணம் தர முடியாது” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டாஸ்மாக் பார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயபிரகாஷ் கடந்த வாரம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என அவரது தந்தை சௌந்தரராஜனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பனியன் நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னாங்கல்பாளையம் பகுதியில் குமாரரத்தினதுரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக பனியன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குமாரரத்தினதுரைசாமி சரியாக தொழில் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் குமாரரத்தினதுரைசாமி நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சகுந்தலாமணி கதவை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழிப்பறையில் மயங்கி கிடந்த சிறுவன்…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூங்காநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிசன் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து பிரியதர்ஷினி வேறு ஒரு வாலிபருடன் தனியாக குடித்தனம் நடத்தி தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலுள்ள கழிப்பறையில் கிரிசன் மயங்கிய நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சைக்கிள் வாங்கி தாங்க” மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

8-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தண்ணம்பாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரண்சுதன் என்ற மகன் இருந்துள்ளான். இவன் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சுமதி தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் சுமதி பகுதிநேர ஆசிரியராகவும், பெட்ரோல் பங்கில் கணக்காளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரண்சுதன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து…. நடைபெற்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் கட்சியினர் கேஸ், சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில பார்வையாளர் மணி, மாவட்ட துணைத்தலைவர் காட்டூர் வெங்கடாசலம், நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொங்கலூர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

கணவன் தகராறில் மனைவியை கடப்பாறையால் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நடுபாளையம் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தற்போது பூங்கொடி அருகில் உள்ள நூல் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பூங்கொடி வழக்கம்போல் மில்லுக்கு வேலைக்கு சென்றுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…. வாலிபருக்கு 37 ஆண்டு சிறை…. தீர்ப்பளித்த நீதிபதி….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு  37 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை வேடப்படி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு கார்த்திக் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த உடுமலை மகளிர் காவல் துறையினர் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. சாலையில் ஆறாக ஓடிய டீசல்…. போலீஸ் விசாரணை….!!

தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் கால்நடை தீவனம் மற்றும் முட்டை உற்பத்தி நிறுவனத்திற்கு ஒரு லாரியை புறப்பட்டு வந்தது. இந்த லாரியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி அதிகாலை 5.30 மணிக்கு காங்கேயம் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனங்காட்டுவில் இருந்து கிளாங்குண்டல் நோக்கி ஒட்டன்சத்திரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தங்கவேலை உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் தங்கவேலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய பேருந்து…. டிரைவர் உள்பட 14 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

சாலை தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 14 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து கோவைக்கு அரசு சொகுசு பேருந்து ஒன்று இரவு புறப்பட்டது. இந்த பேருந்தில் 42 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை டிரைவர் ராகவன் ஓட்டி வந்துள்ளார். இந்தப் பேருந்து அதிகாலை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி எம்.நாதம்பாளையம் பிரிவு 6 வழிச்சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்… நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி…!!!

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்கள்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் இன்று பல்லடம் சட்டமன்றம் தொகுதி, திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் 4 உட்பட்ட பல்வேறு வார்டுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தார்கள். அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

பள்ளி ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயசீலன் தனது சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்றிருந்தார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது பூஜை, படுக்கையறையில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தது. மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த 2.5 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. வடமாநில தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் ரித்தேஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை பழகி வந்துள்ளார். இதனையடுத்து அனில்குமார் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி வாட்ஸப்பில் தகவல் அனுப்பி வந்துள்ளார். இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாக்கடை கால்வாயில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

மர்மமான முறையில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கஞ்சம்பாளையம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியில் செல்பவர்கள் இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாக்கடை கால்வாயில் இருந்து முதியவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார்? […]

Categories
மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரை அழைக்காமல் பூமி பூஜை… அ.தி.மு.க.- பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது கொழுமங்குழி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனை கொண்டாடுவதற்காக கொழுமங்களில் திமுகவினர் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால் இந்த பூமி பூஜைக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியாவை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து அங்கு பணியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருவருக்கும் நடந்த ரகசிய திருமணம்…. உறவினர்களின் அளித்த தகவல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமியை திருமணம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவனும் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அந்த சிறுமி வந்துள்ளார். அப்போது சிறுவன் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளான். இந்நிலையில் அவர்கள் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல்,கேஸ் விலை உயர்வை கண்டித்து…. போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வடக்கு மாவட்ட பொது செயலாளர் ஹிதாயத்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் செயலாளர் அன்வர் பாஷா, பொருளாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் துணை தலைவர் அப்துல் சத்தார் வரவேற்று பேசினார். இந்த போராட்டத்தில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வு, நூல் விலை உயர்வை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் முருகசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காரில் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சக்திவேலுக்கு கடந்த சில மாதங்களாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள்…  திருப்பூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகள்… முதல்வர் அடிக்கல்…!!!

திருப்பூரில் ரூபாய் 56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முகஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவற்ற திட்டங்களை துவங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலை உயர்வு… திருப்பூரில் நவ.26 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்…!!!

நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் நவம்பர் 26-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நூலின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நூல் விலை 62% உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூல் விலை அதிகரிப்பின் காரணமாக பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பனியின் போது…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனம் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளை அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மங்கலம் பகுதியில் மோசஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்தி பல்லடம் பேருந்து நிலைய மார்க்கெட்டில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரியாணி கடையில் சமீபகாலமாக வியாபாரம் சரியாக இல்லாமல் நஷ்டத்தில் நடத்தி வந்துள்ளார். இதனால் கடையில் வேலையாட்களை நிறுத்திவிட்டு அவரது தாயை கடையில் உதவியாளராக வைத்துக் கொண்டுள்ளார். இருப்பினும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ரவி குடும்பத்தை பிரிந்து திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி குடிபோதையில் இருந்த ரவி அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரவி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாருமில்லாத சமயத்தில்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பழனியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் திடீரென வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இருவரும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள சித்தம்பலம் பகுதியில் சிவசுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் பங்குச் சந்தையில் பணம் முதலீடு செய்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தந்தை கார்த்திக்கிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என கண்டித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மின்மையான ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மின் மயான ஊழியர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கால கவுண்டன்புதூர் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நகராட்சி மின்மயானத்தில் தங்கியிருந்து எரியூட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கராஜ் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ரங்கராஜை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரங்கராஜ் பரிதாபமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேங்காய் பறித்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அய்யப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆயிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நாவீதன்புதூரில் உள்ள சிதம்பரம் என்பவரது தோப்பில் ஆயிமுத்து மற்றும் சிலர் தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மரத்தில் ஏறி ஆயிமுத்து தேங்காய் குழையை வெட்டும் போது எதிர்பாராத விதமாக அரிவாள் தென்னை மரத்தை உரசியபடி இருந்த உயர் அழுத்த மின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த முதியவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை-திருச்சி மெயின் ரோட்டில் வெள்ளக்கோவில் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பொன்னுசாமி மீது மோதியது. இதில் பொன்னுசாமி பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் பொன்னுசாமியை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மேல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

2 கடைகளில் திருட்டு…. உரிமையாளர்களின் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

2 கடைகளில் செல்போன்கள், பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்-சென்னிமலை சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் தேவராஜ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேவராஜ் மறுநாள் காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது உள்ளே வைத்திருந்த 3 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் மர்மநபர்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்து செல்போன்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் பண மோசடி…. வசமாக சிக்கிய காவலாளி…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் பணம் மோசடி செய்த காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியார் காலனி பகுதியில் மதனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மதனா அளித்த மனு தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு பட்டா வாங்கி தருகிறேன் என கூறி அவரை வரவழைத்து ரூ.2000 பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த வேன்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நெஞ்சுவலியால் வேனிலேயே டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமண குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பல்லடம் அருகே உள்ள தனியார் பனியன் கம்பெனியில் கடந்த 3 மாதங்களாக சரக்கு வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமண குமார் தனியார் பனியன் கம்பெனியிலிருந்து வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பொங்கலூர் அருகில் சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் கம்பெனிக்கு திரும்பி வந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சாலையை கடக்க முயன்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மிபாளையம் பகுதியில் கடந்த 3-ஆம் தேதி வயதான முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வயதான முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அந்த முதியவரை கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார்கள் மோதியதில் நிதி நிறுவன அதிபரின் மனைவியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கள் கோகிலாம்பாள் என்ற மாணவி இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேலும் அவரது மனைவி கோகிலாம்பாளும் காரில் வெள்ளகோவிலில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்து விட்டு அங்கேயே தங்கி விட்டனர். அதன்பின் மறுநாள் காலையில் சக்திவேல் மற்றும் அவரது மனைவி இருவரும் காரில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது ஸ்கூட்டர் மோதல்…. மகன் கண் முன் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் மகன் கண் முன் தாயார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரிச்சிபாளையம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வைஷ்ணவ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது மகன் வைஷ்ணவுடன் பத்மாவதி ஸ்கூட்டரில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின்மோட்டார் அறையில் கிடந்த தொழிலாளி பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மின் மோட்டார் அறையில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பகுதியில் சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் கிராமம் அமராவதி ஆற்றுப் புறம்போக்கு நிலத்தில் பயன்பாட்டில் இல்லாத மின்மோட்டார் அறை உள்ளது. அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. ஆட்சியர் அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த முதியவர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா…. போலீஸ் வலைவீச்சு….!!

தூங்கிக் கொண்டிருந்த முதியவரிடம் 2 பேர் செல்போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமாரவலசு பகுதிக்கு அருகில் உள்ள கடையின் முன்பு முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முதியவர் படுத்து இருந்ததை பார்த்தனர். இதனையடுத்து அந்த 2 பேரில் மோட்டார் சைக்கிள் பின்னாடி அமர்ந்திருந்தவர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி வந்து அவரிடம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பரமசிவம் பாளையம் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வீட்டிற்கு அடிக்கடி மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் முத்துக்குமார் தீபாவளி தினத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பைக்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பைக் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாண்டாம்பாளையம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் முருங்கைக்காய் கொள்முதல் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி கந்தசாமி பாளையத்திலிருந்து முத்தூர் நோக்கி பைக்கில் பழனியாண்டபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது புத்தூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் ஒன்று ராமசாமி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 7 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில் சட்டவிரோதமாக சீட்டாட்டம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இடத்தில் 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம்-பொள்ளாச்சி சாலை செட்டி தோட்டம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வக்கீலாக உள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது மனைவியின் பாட்டி இறந்ததற்கு துக்கம் விசாரிக்க கடந்த 31-ஆம் தேதி வீட்டின் கதவை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரில் அவினாசிக்கு சென்றுள்ளார். அதன்பிறகு இறுதி சடங்கில் கலந்து கொண்டு குடும்பத்துடன் மீண்டும் காரில் தாராபுரம் வந்துள்ளார். அப்போது சுரேஷ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த கட்டிடம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பைபாஸ் சாலை புதிய மேம்பாலம் அருகில் சரவணன் என்பவருக்கு சொந்தமான கடையில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிட தூண் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தாராபுரம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மற்றொரு கட்டிட தொழிலாளியான பஜனைமட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கொத்தனார் கொலை வழக்கு” 22 வருடம் தேடப்பட்ட குற்றவாளி…. அதிரடி காட்டிய போலீஸ்….!!

கொத்தனார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 22 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள கல்பாரப்பட்டி கொம்பாடிபட்டி மேட்டுபகுதியில் கடந்த 1999-ஆம் ஆண்டு கொத்தனார் சுரேந்திரன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அவருடன் கொத்தனாராக பணிபுரிந்து வந்த சுபாஷ் என்ற சுபாஷ் சந்திரபோஸ், கணேசன், பாலு, மூர்த்தி என்ற ஜான் விக்டர் ஆகிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மூர்த்திக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டிரைவர் கொலை வழக்கு…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தனம்பாளையம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதே போன்று மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த் புரத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவர் திருப்பூரில் வசிக்கும் முருகன் என்பவரின் ஆம்புலன்ஸை ஓட்டி வருகிறார். இவரும் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பாக ஆம்புலன்சை நிறுத்தி பணியாற்றி வந்துள்ளார். கடந்த 17-ஆம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்…. 2844 பேர் மீது வழக்கு பதிவு…. அபராதம் விதித்த போலீசார்….!!

போக்குவரத்து விதிகளை மீறிய 2844 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் காங்கேயம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலைக்கவசம் அணியாமலும், மது குடித்துவிட்டும், மோட்டார் உரிமம் இல்லாமலும், சீருடை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருத்தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. 2 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவநல்லூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு பொன்னாபுரம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக மாணிக்கத்திற்கும் அதே ஊரில் வசிக்கும் வேலுச்சாமி, ரகுபதி ஆகியோருக்கும் இடையே தாராபுரம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் வெள்ளைச்சாமி, ரகுபதி ஆகியோருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் அவர்கள் நிலத்தை […]

Categories

Tech |