எட்டு மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 8 மாதங்களாக குமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட கலெக்டர் அரவின் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று அருவியில் குளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பாசி பிடித்த இடங்கள் மற்றும் சுற்றுப்புற […]
