ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்களான கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் ஹெலிகாப்டர் பிரதர் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். நிதி நிறுவனத்திற்கு உதவியாக செயல்பட்டதாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் […]
