அரசு பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவரை கொன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வசூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பள்ளகால் புதுக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். அங்கு மாணவர்களிடையே நடந்த மோதலில் செல்வசூர்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து செல்வ சூர்யாவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். […]
