நெல்லையில் கூலித்தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் கூலித் தொழிலாளியான கணேஷ்ராஜா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று கூலி வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் தனது வீட்டிற்கு அம்பலவாணபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கணேஷ்ராஜாவின் மீது பலமாக மோதியது. இதனால் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் […]
