2-வது முறை திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் தெற்குவீதி பகுதியில் சங்கரநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் அருகில் ஜவுளிகடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் திருவலஞ்சுழி மணப்படையூர் பகுதியைச் சேர்ந்த கங்காஸ்ரீ என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார். அப்போது சங்கரநாராயணன், கங்காஸ்ரீ இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை […]
