கொரோனா தொற்றால் திருச்சி மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையை பொருத்தவரை தற்போதுவரை 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் 70 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த 10 நாட்களாக திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி கொரோனாவால் தொடர்ந்து சிகிச்சையில் பெற்று வந்தார். அவருக்கு நீரிழிவு நோய் இந்த நிலையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்பட்டதால் அவர் […]
