திரிபுராவில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. திரிபுராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா மாநிலத்தில் அகர்தலா மாநகராட்சி 51 வார்டுகள், 13 நகராட்சிகள், ஆறு நகர பஞ்சாயத்துகளில் உள்ள 334 இடங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் பாஜக 2018 ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் இதுவாகும். இந்நிலையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் […]
