ஈரோடு அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தவரை ஒரு கும்பல் கடத்தி சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பவானி வட்டம் தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் என்பவரும் குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஈஸ்வரன் மூலம் திருமணம் நடந்துள்ளது. பிறகு சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகேயுள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள ஈஸ்வரன் வீட்டில், செல்வனும் இளமதியும் தங்கியுள்ளனர். இருவரும் வெளியே […]
