பொய் பேசுவதில் கைதேர்ந்தவர்கள் திமுக, காங்கிரஸ் கட்சியினர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாடினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பெற மாவட்டமாக செழிக்க அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக, பாஜக பிரதிநிதிகள் இல்லாததால் குறைகள் அரசுக்கு தெரிவிப்பதில்லை. அதனால் வளர்ச்சி தடைபடுகிறது. ஆளும் கட்சியை […]
