திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. விழுப்புரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது குப்பையிலும் ஊழல் செய்து உள்ளதாக அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது கனிமொழி எம்பி குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்கு […]
