தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவர் திமிங்கலத்தின் வாந்தியால் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் வசிக்கும் மீனவரான நரோங் பெட்சராஜ், கடலிலிருந்து கரைக்கு திரும்பிய சமயத்தில், நியோம் கடற்கரையில் வித்தியாசமான கட்டி போல இருந்த ஒரு பொருளை பார்த்திருக்கிறார். அதன் பின்பு, அது திமிங்கிலத்தின் வாந்தி என்று அவருக்கு தெரியவந்திருக்கிறது. எனவே, அவர் அதனை சோன்க்லா பல்கலைக்கழத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அதனை அவர்கள் பரிசோதித்தபோது, ஆம்பர்கிரிஸ் என்ற விலை உயர்ந்த பொருள் என்று தெரியவந்திருக்கிறது. இப்பொருள், […]
