திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டது பற்றி ஆவணங்கள் சமர்ப்பித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்னும் கேள்வி எழும்பியுள்ளது. தர்மபுரி மாவட்டம் தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திப்பிரெட்டி ஹள்ளி ஊராட்சியில் 12 வார்டுகள் இருக்கிறது. இந்த ஊராட்சியின் தலைவராக சித்ரா சுப்பிரமணி என்பவர் பதவி வகித்து வருகின்றார். பாமகவை சேர்ந்த இவர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக சக கட்சியை சேர்ந்த துணைத்தலைவி அஸ்வினி திருமால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் புகார் தெரிவித்து […]
