திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதில் பூ வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டி திருப்பூருக்கு மானாமதுரையில் இருந்து காரில் சென்றுள்ளார். வன்னீஸ்வரன் என்பவர் காரை ஓட்டியுள்ளார். கார் கொடைரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. […]
