3,5,8 வகுப்பு என பலவற்றிலும் நுழைவுத் தேர்வை திணிக்க பார்க்கின்றனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டம் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “பொறியியல் பாடத்திட்டம் போல் கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றம் செய்யப்படும். பொறியியல் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது போல் மூன்றாம் ஆண்டுக்கு புதிய பாடம் திட்டம் கூடிய […]
