இந்திய ஒற்றுமைப் பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் ராகுல் காந்தியை சந்தித்தனர். அப்போது, திடீரென்று அனிதாவின் அண்ணனை பாதுகாவலர்கள் அகற்ற முயன்றபோது, உடனே தடுத்து நிறுத்திய ராகுல் ஆவேசமாக பாதுகாவலரை ஓரமாக போக சொன்னார். இதனால் சற்றுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் ஒருப்பகுதி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
