ஆஃப்கானிஸ்தானிலுள்ள ஐ.நா வளாகத்தின் மீது அரசுக்கு எதிரான மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் போர் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நாவின் பொது செயலாளர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருக்கும் ஹீரத் நகரில் ஐ.நா வளாகம் அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென அரசுக்கு எதிரான சில மர்ம நபர்கள் ஐ.நா வளாகத்தின் மையப் பகுதியை குறிவைத்து ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். மேலும் ஐ.நா அலுவலகத்தின் மீது துப்பாக்கி சூட்டையும் நடத்தியுள்ளார்கள். இவ்வாறு மர்ம நபர்கள் […]
