மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சிப்பட்டி பகுதியில் நாகசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி, அருணா ஆகிய 3 பேரும் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ள நிலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது கற்பகவள்ளி, அருணா, முத்துலட்சுமி மீது மின்னல் […]
