ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்காவினை கொண்டுவருதல் தொடர்பாக கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூரில் உள்ள ஏலகிரிமலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகின்றது. எனவே சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏலகிரி மலைக்கு விடுமுறை நாட்களில் பயணிகளின் வரத்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இங்கு கோடை விழா நடத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அந்த மலையில் 100 ஏக்கரில் […]
