பிலிப்பைன்ஸில் குமுறி வரும் தால் எரிமலையால் பெரும்பாலானோர் பாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிலிப்பைன்ஸில் உள்ள தால் எரிமலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குமுற ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு எரிமலை திடீரென வெடித்து விடுமோ என்ற பதற்றம் நிலவி வருகிறது. அதேசமயம் அதிகாரிகள் எரிமலை வெடிக்கும் என்று உறுதியாக கூற முடியாது என்று தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த எரிமலை சாம்பலையும், புகையையும் ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு கக்கியுள்ளது. இதன் காரணமாக தால் எரிமலையை […]
