திருமண நேரத்தில் மணமகனிடம் இருந்த தாலியை பறித்து மணப்பெண்ணுக்கு கட்ட முயன்ற காதலனை உறவினர்கள் பிடித்துள்ளனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலயம் அருகே உள்ள முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. வேத மந்திரங்கள் முழங்க மணமகன் மணிகண்டன் தாலியை எடுத்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட […]
