நீட் தேர்வு எழுதும் மாணவிகள் தாலியை கழற்ற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்த மனுவுக்கு தேசிய தேர்வு மையம் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வெழுதும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது மற்றும் கைக்கடிகாரம் அணியக்கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக மாணவிகள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக சென்னை வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் ஐகோர்ட்டில் […]
