ராமநாதபுரம் மாவட்டத்தில் கோழிக்கடை வியாபாரியையும் அவரது தாயாரையும் அரிவாளால் தாக்கிய 3 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பாம்பூர் பகுதியில் அகிலன் என்பவர் கோழிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முன்பகை காரணமாக புழுதிக்குளம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் அகிலனை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனைப்பார்த்த அவரது தாயார் முருகேஸ்வரி தடுக்க முயன்ற நிலையில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயம் அடைந்த தாயும் […]
