மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் முன்பாக தாய்-மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகே ராமிரெட்டிபட்டி பகுதியில் தனசேகரன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தனசேகரன் மற்றும் அவருடைய தாய் பழனியம்மாள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து தனசேகரனும், பழனியம்மாளும் கையில் வைத்திருந்த பெட்ரோலை மேலே ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த […]
