பெலகாவி மாவட்டத்தில் பஜ்ஜி சாப்பிட்ட தாய் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் ஹீதளி கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி(55 வயது) இவருடைய மகன் சோமலிங்கப்பா. இருவரும் விவசாயிகள் ஆவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் தோட்டத்தில் வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் பார்வதி பஜ்ஜி செய்துள்ளார். தாய் மகன் இருவரும் அந்த பஜ்ஜியை சாப்பிட்டுள்ளனர். பஜ்ஜி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இருவரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]
