சிவகங்கை இளையான்குடி அருகே தாய், மகன் இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலத்துறையூர் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபி, கண்ணப்பன், முத்துசாமி மகன் அக்னிச்சாமி மற்றும் நிவாஸ், வசந்த் உள்ளிட்ட 7 […]
