மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 7மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கி குழந்தை பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செல்வா சிட்டி பகுதியில் மனநலம் பாதித்த பேச்சித்தாய் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சித்தாய்க்கும் நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் நம்பிராஜன் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர் மும்பையில் ஹோட்டல் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இதனால் நம்பிராஜன் திருமணமானவுடன் தனது மனைவியான பேச்சுத்தாயை மும்பைக்கு அழைத்துச் […]
