கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறப்பு சான்றிதழிலிருந்து தந்தையின் பெயரை நீக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதோடு, திருமணமாகாத தனது தாயின் பெயரை மட்டுமே அனைத்து சான்றிதழ்களிலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, திருமணமாகாத தாய்மார்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குழந்தைகளும் இந்த நாட்டின் குடிமக்களே.அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை […]
