பெரம்பலூர் அருகே அடக்கம் செய்யப்பட்ட தாயின் சடலத்தை தோண்டி எடுத்து வந்து அதனுடன் தூங்கிய மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், பரவலாய் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்ட காரணத்தினால் தாய் மூக்காயி மட்டும் அவரை வளர்த்து வந்துள்ளார். இடையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தாய் மூக்காயி உயிரிழந்துவிட்டார். இதை தொடர்ந்து மனநலம் […]
