தமிழக முதலமைச்சர் தாயாரின் உடல் சேலம் சிலுவம்பாளையத்தில் அதில் இருக்கின்ற மயானத்தில் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் […]
