சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 23-ம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க ஆரம்பித்தனர். பங்குனி திருவிழாவையொட்டி முத்துமாரியம்மன் தினமும் இரவு குதிரை வாகனம், சிம்ம வாகனம், […]
