உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 51 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 139 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சியின் 14 வது வாக்கு பதிவு மையத்தில் திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி […]
