ஜப்பானில் தென்மேற்கு பகுதிகளை ‘நன்மடோல்’ என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சில நாள்களுக்கு முன் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மில்லியன்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், அங்கு மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்திருந்தாலும், அண்டை நாடான இந்தியாவின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயரும் […]
