போக்குவரத்து போலீஸ்காரரை ஒரு வாலிபர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கத்தில் வசித்து வருபவர் போக்குவரத்து போலீஸ்காரர் பிரகாஷ் (35). இவர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் படித்துறை இறக்கம் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் தனது பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடி செல்கிறார். அவரை உடனே பிடியுங்கள் என்று தெரிவித்தார். இதனை அடுத்து அந்த வாலிபர் தெரிவித்த பைக்கில் வந்தவரை பிரகாஷ் வழிமறித்து விசாரணை மேற்கொண்டார். […]
