நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் திருடிய நபர் தப்பியோடும் போது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மர்மநபர்கள் வந்து மது பாட்டில்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து வருகின்றது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் சுழற்சி முறையில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நல்லிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் சக்திவேல் நேற்று முன்தினம் காவல் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதிகாலை 3 மணியளவில் கடையில் இருந்த மது பாட்டில் […]
