திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள நரசிங்கபுரம் மகாலட்சுமியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. முன்பாக காப்புகட்டி விரதம் இருந்த பெண்கள் வலையபட்டியிலிருந்து சேர்வை ஆட்டம், வாணவேடிக்கையுடன் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. அதன்பின் நேர்த்திக்கடன் செலுத்தவந்த பெண்கள், ஆண்கள் என 50 பேர் கோயில் முன் வரிசையாக அமர்ந்தனர். அதனை தொடர்ந்து கோவில் பூசாரி தேங்காய்களை வைத்து பூஜைசெய்து, […]
