டெல்லி வன்முறையின்போது ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் கல்வீச்சு தாக்குதலில் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது உடலில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் […]
