அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பெரியபாலம் அருகே ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டைமேடு பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நிவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு லோகித் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவிக்குமார் […]
