தலைமையாசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. ஆனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் காட்டுகோட்டை என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்த […]
