தமிழக அமைச்சர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் ஆவது தலைமைச் செயலகத்திற்கு வந்து பணிகளை கவனிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும், திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அறிவதற்காகவும் துறை சார்ந்த செயலர்கள் மற்றும் அலுவலர்களோடு அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால் அமைச்சர்கள் தலைமை செயலகத்திற்கு வருவது மிக குறைவாக உள்ளது. முதல்வர் அவர்கள் வெளியூர் சென்றால் தலைமை […]
