தலீபான் தீவிரவாதிகள் வெள்ளை நிற உடையை அணிந்து கைகளில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு சாலையில் அடையாள அணிவகுப்பு நடத்தியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தலீபான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலீபான் […]
