ராஜஸ்தான் மாநிலமான ருக்காசர் கிராமத்தில் தலித் சமுதாய இளைஞர் ராகேஷ் மேக்வால் என்பவர் கடந்த 27ஆம் தேதி உள்ளூர் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ராகேஷ் மேக்வால் கூறியிருப்பதாவது, முன்விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி அருகே மது குடிக்க வற்புறுத்தினர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தை அடுத்து அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தனது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]
