திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் கேர் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 78,582 கோரிக்கை மனுக்களை மக்களிடமிருந்து பெற்றுள்ளனர். அதில் 45,088 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதில் தகுதியுள்ள மனுக்கள் […]
