ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் தற்கொலை படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 32 நபர்கள் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தஷ்ட்-இ-பார்ச்சி என்னும் நகரில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்திற்குள் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் திடீரென்று புகுந்துள்ளார். அதனை தொடர்ந்து தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை அவர் வெடிக்க செய்ததில் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 32 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். […]
